எனக்கு கழிவரையும் படிப்பகமே அங்குதான் வாசிக்க இன்னும் இனிமையாக இருக்கிறது. இவை என் விருப்பத்திற்குரிய நாவல்களின் பட்டியல் இவை அனைத்தும் என் வீட்டின் இல்ல நூலகத்தில் சேகரித்து வைத்துள்ளேன்.
1) பிரதாப முதலியார் சரித்திரம் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை
2) கமலாம்பாள் சரித்திரம் – பி.ஆர். ராஜம் அய்யர்
3) கிளாரிந்தா – மாதவையா
4) நாகம்மாள் – ஆர் சண்முக சுந்தரம்
5) தில்லான மோகனாம்பாள் – கொத்தமங்கலம் சுப்பு
6) பொன்னியின் செல்வன் – கல்கி
7) வீரபாண்டியன் மனைவி – அரு.ராமநாதன்
8) சயாம் மரண ரயில் – ரெ. சண்முகம்.
9) லங்காட் நதிக்கரை – அ.ரெங்கசாமி
10) தீ.– எஸ். பொன்னுதுரை.
11) பஞ்சமர் – டேனியல்
12) பொய்தேவு – க.நா.சுப்ரமணியம்.
13) வாடிவாசல் – சி.சு.செல்லப்பா
14) அபிதா – லா.ச.ராமாமிருதம்.
15) நித்யகன்னி – எம்.வி. வெங்கட்ராம்
16) பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு
17) அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்
18) மோகமுள் – தி. ஜானகிராமன்
19) மரப்பசு – தி.ஜானகிராமன்
20) வாசவேஸ்வரம் – கிருத்திகா
21) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன்
22) சில நேரங்களில் சில மனிதர்கள்– ஜெயகாந்தன்
23) பாரீஸிக்கு போ – ஜெயகாந்தன்
24) புயலிலே ஒரு தோணி – பா.சிங்காரம்
25) கடலுக்கு அப்பால் – பா.சிங்காரம்
26) நினைவுப்பாதை – நகுலன்
27) நாய்கள் – நகுலன்
28) ஒரு புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி
29) ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
30) குழந்தைகள் பெண்கள் ஆண்கள்– சுந்தர ராமசாமி
31) கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
32) சாயாவனம் – சா. கந்தசாமி
33) தொலைந்து போனவர்கள் – சா. கந்தசாமி
34) நாளை மற்றுமொரு நாளே – ஜீ. நாகராஜன்
35) குருதிப்புனல் – இந்திரா பார்த்தசாரதி
36) கருக்கு -பாமா
37) கரிப்பு மணிகள் – ராஜம் கிருஷ்ணன்
38) வாடாமல்லி – சு.சமுத்திரம்.
39) கல்மரம் – திலகவதி.
40) போக்கிடம் – விட்டல்ராவ்
41) புத்தம் வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன்
42) கரைந்த நிழல்கள் – அசோகமித்ரன்
43) பதினெட்டாவது அட்சக்கோடு – அசோகமித்ரன்
44) ஒற்றன் – அசோகமித்ரன்
45) இடைவெளி – சம்பத்
46) பள்ளிகொண்டபுரம் – நீல பத்மநாபன்
47) தலைமுறைகள் – நீல.பத்மநாபன்
48) கிருஷ்ணபருந்து – ஆ.மாதவன்
49) அசடு – காசியபன்
50) வெக்கை – பூமணி
51) பிறகு – பூமணி
52) தலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன்
53) எட்டுதிக்கும் மதயானை – நாஞ்சில் நாடன்
54) ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமது மீரான்
55) மானுடம் வெல்லும் – பிரபஞ்சன்
56) சந்தியா – பிரபஞ்சன்
57) காகிதமலர்கள் – ஆதவன்
58) என் பெயர் ராமசேஷன் – ஆதவன்
59) ரத்தம் ஒரே நிறம் – சுஜாதா
60) உடையார் – பாலகுமாரன்
61) கரிசல் – பொன்னிலன்
62) கம்பாநதி – வண்ணநிலவன்
63) கடல்புரத்தில் வண்ணநிலவன்
64) பழையன கழிதலும் – சிவகாமி
65) மௌனப்புயல் – வாசந்தி
66) ஈரம் கசிந்த நிலம் – சி. ஆர் ரவீந்திரன்
67) பாய்மரக்கப்பல் – பாவண்ணன்.
68) பாழி – கோணங்கி
69) ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் – தமிழவன்
70) வார்ஸாவில் ஒரு கடவுள் – தமிழவன்.
71) கோவேறு கழுதைகள் – இமையம்
72) செடல்– இமையம்
73) உள்ளிருந்து சில குரல்கள் – கோபி கிருஷ்ணன்.
74) வெள்ளாவி – விமல் குழந்தைவேல்
75) கரமுண்டார்வீடு – தஞ்சை பிரகாஷ்
76) விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
77) காடு- ஜெயமோகன்
78) கொற்றவை ஜெயமோகன்
79) உப பாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன்
80) நெடுங்குருதி – எஸ்.ராமகிருஷ்ணன்
81) யாமம் – எஸ்.ராமகிருஷ்ணன்,
82) கூகை சோ.தர்மன்
83) புலிநகக்கொன்றை – பி.ஏ.கிருஷ்ணன்.
84) ஸீரோ டிகிரி – சாரு நிவேதிதா
85) எக்ஸிஸ்டென்ஷியலிசயமும் பேன்சி பனியனும் – சாரு நிவேதிதா
86) சொல் என்றொரு சொல் – பிரேம் ரமேஷ்
87) சிலுவை ராஜ் சரித்திரம்– ராஜ்கௌதமன்
88) தகப்பன்கொடி – அழகிய பெரியவன்.
89) கொரில்லா – ஷோபா சக்தி
90) நிழல்முற்றம் – பெருமாள் முருகன்
91) கூளமாதாரி – பெருமாள் முருகன்
92) சாயத்திரை– சுப்ரபாரதிமணியன்
93) ரத்தஉறவு – யூமாவாசுகி
94) கனவுச்சிறை – தேவகாந்தன்
95) அளம் – தமிழ்செல்வி
96) அலெக்ஸ்சாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்.– எம்.ஜி.சுரேஷ்
97) அரசூர் வம்சம் – இரா.முருகன்
98) அஞ்சலை – கண்மணி குணசேகரன்
99) குள்ளச் சித்தன் சரித்திரம் – யுவன் சந்திரசேகர்
100) ஆழி சூழ் உலகு – ஜோ டி குரூஸ்
நான் என்ன வாசிக்கலாம் என்று யோசிக்கும் பொழுது ஒரு பெரிய பட்டியலையே கொடுத்தார் எழுத்தாளர் (எஸ்.ரா). இப்பொழுதுதான் நூல்களை வாசிக்கப் பழகிவரும் எனக்கு (கடந்த பத்தாண்டுகலாக) மிகத் தேவையாக இருந்தது. எந்த நாவலை வாசிக்கலாம் என்ற குழப்பம் வரும். சில நேரம் எதாவது ஒன்றை எடுத்து வாசிக்கத் தொடங்குவேன் இரண்டு பக்கங்கள் கடப்பதற்குள் போதும் என்றாகிவிடும் எனக்கு. அப்போதுதான் தெரிந்தது படிப்பதும் எழுதுவதும் ஒருவருக்க இயல்பாக வருகிறது என்றால் அது ஒரு வரம். என்றாலும் பழகிக்கொண்டால் எல்லாம் வந்துவிடும் என்பது உண்மைதான் இப்போது எனக்கும் கைவசமாகி இருப்பது என்பது மகிழ்சியாகவே உள்ளது. ஒரு நாவலை முழுமையாக வசிப்பதும் அதனுடன் பயனப்படுவதும் ஒரு தனி சுகம்தான் என்பதை அனுபவித்தவர்கள் நிச்சயம் இதை மறுக்கமாட்டார்கள். வாசிப்பாளன் எழுத்தாளனைக்காட்டிலும் கொடுத்து வைத்தவன் எந்த ஒன்றையும் வாசிக்கவும் உடனே அவற்றுடன் ஒன்றிவிடவும் நீண்ட காலம் தேவையில்லை. கையில் எடுத்து வாசிக்கத் தொடங்கிய சில மணி நேரத்தில் அதை அடைந்து விடலாம். ஒரு நாவல் வாசித்தால் என்ன கிடைக்கும் என்று கேட்பவரா நீங்கள் எனக்கு கிடைத்தது மன நிறைவு அது பலருக்கும் பலவாக கிடைக்கும் பல மனிதர்களின் வாழ்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் நிகழ்ச்சிகள் என எல்லா வாழ்கையிலும் எனக்கு நெருக்கமான ஒரு வாழ்கை அனுபவம் கிடைக்கிறது. உணர்வு பூர்வமானது அது. இதைக்காட்டிலும் ஒரு சிக்கல் இருக்க முடியாது இந்த சிக்கலை அவ்வளவு சுலபமாக விளக்கிக் காட்டிவிடவும் முடியாது. வாசிக்க வாசிக்க அனுபவம் அதன் சுவை மிகத்தீவிரமாக ஒரு போதையைப் போல நல்ல மயக்கத்திலேயே நம்மை வைத்திருக்கிறது. அது ஒரு சுகானுபவம். இன்பம் துன்பம் போன்றது. என்று கூறலாம்.
வாழ்க்கையின் எல்லா பக்கங்களையும் ஒருவன் வாசிக்க முடியும் என்றால் அது இலக்கியத்தின் வழி மட்டுமே சாத்தியம். வாசிப்பு கொடுக்கும் வெளிச்சம் மிகப்பெரியது. அது வாழ்கையை கடக்க உதவுகிறது. ஒவ்வொரு இலக்கியமும் வாழ்கையை மீட்டு மீண்டும் நடத்திக் காட்டுகிறது,
அப்படியான ஒரு மனநிலையை எனக்குக் கொடுத்தது இந்த பட்டாம் பூச்சி நாவல். இந்த நாவல் ஒரு மனிதன் கூண்டில் இருந்து வெளியே வருவதற்கு என்ன என்ன செய்கிறான். எது அவனைச் செய்ய வைக்கிறது. அப்படி என்ன இருக்கிறது. இந்த உலக வாழ்கையில் ஏன் என்ற பல கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தாலும். சுதந்திரம் எது என்பதை ஒவ்வொரு மனிதனும் தீர்மானிக்கிறான். அந்த சுதந்திரம் பறிக்கப்படும் பொழுது அவன் செய்யும் செயல்கள் யாவும் அசாத்தியமான மனிதனாக நமக்கு காட்டும். அப்படி தொடர் முயற்சி வெற்றியை வாழ்கை அவனுக்கு அவன் நினைத்தபடி கொடுக்கும். என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த பட்டாம் பூச்சி நாவல்.
குறிப்பு: இந்த பட்டியல் உங்களுக்கு பயன்படும் என்றே கொடுத்துள்ளேன்.