Showing posts with label தரணி ராசேந்திரன். Show all posts
Showing posts with label தரணி ராசேந்திரன். Show all posts

Friday, May 7, 2021

நானும் என் பூனைக்குட்டிகளும்

நானும் என் பூனைக்குட்டிகளும்

தரணி ராசேந்திரன்

எழுத்து பிரசுரம் 2021 வெளியீடு

இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல என்பதைச் சொல்லும் ஓர் அழகான குறுநாவல்.

நகரங்களில் தொலைந்துபோன மனிதாபிமானத்தை, அன்பை, கருணையை மனிதனுக்கு மீண்டும் நினைவுபடுத்தும் முயற்சி இந்நாவல்.

மனித உணர்வுகள் இறந்துபோன நகரத்தில் மனதில் ஈரமின்றி வெற்றுடம்பைச் சுமந்துகொண்டு அலைபவர்களாக இன்றைய மனிதர்கள் உள்ளனர்.

மனிதர்கள் வாழக்கூடிய இடத்தில் வேறு எந்த உயிரினத்திற்கும் இடமில்லை. அந்த இடம் முழுக்க முழுக்க மனிதர்களுக்காக ஆக்கிக் கொள்ளப்பட்டது. உண்மையில் இங்குப் பிரச்சனைகள் விலங்குகளோ மரம் செடி கொடிகளோ அல்ல. மனிதன்தான் எல்லாவற்றையும் பிரச்சனை ஆக்கிக் கொள்கிறான். எல்லாவற்றையும் தனது உடைமை என்று கருதுகிறான்.

மனிதன் சக மனிதனை, சக உயிரினங்களை எப்படி நடத்துகிறான் என்பதன் சாட்சியாக இந்நாவல்.

இலக்கியம் என்பது மனிதனைப் பற்றி மட்டும் பேசுவது அல்ல. சக உயிரினங்களையும் பிணைத்துப் பேசக் கூடியது. பழந்தமிழ் இலக்கியங்கள் இதற்குச் சான்றாகும்.

நகர தெருக்களில் வளர்ந்திருக்கும் ஒரு மரம், அந்த தெருவில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நாய், எங்கோ ஒரு இடத்தில் மதில் மீது உலவிக் கொண்டிருக்கும் ஒரு பூனை இவையெல்லாம் மனிதனைப் பொறுத்த வரை இங்கு வாழ தகுதி இல்லாதவை. மனிதன் மட்டுமே இங்கு வாழத் தகுதி உடையவன் என்பதான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைத்து அதுவே சரி என வாழ்ந்து கொண்டு வரும் மனிதர்கள் மிகக் குரூரமான மனம் படைத்தவர்கள். அவர்களின் மனதை மாற்றவேண்டியது அவசியம்.

ஒரு எழுத்தாளனுடைய பணி மனிதர்களுக்காக மட்டுமன்றி புறக்கணிக்கப்பட்ட வாயில்லாத ஜீவன்களுக்கும், மரம் செடி கொடிகளுக்கும் சேர்த்துத் தான் அவன் பேசியாக வேண்டும். எழுதியாக வேண்டும்.

இங்கு அரசியல் மனிதர்களுக்கு மட்டும் என்று கருதப்படுகிறது. அது அனைத்து உயிர்களுக்கும் ஆனது என்ற புரிதல் எழுகிற பொழுது இவை எல்லாம் நிச்சயம் மாறியிருக்கும். அப்படியான காலம் விரைவில் கை கூடும் என்ற நம்பிக்கையில். இந்த இரவை கடந்து போகிறேன்.

மனித இன அழிப்புகளை வன்மையாகக் கண்டிக்கும் நாம் பிற உயிர்களையும் அவ்வாறே போற்றி மதிக்க வேண்டும் பாதுகாக்க வேண்டும்.

தரணி ராசேந்திரனின் சமூக பார்வை,  சமூகத்தின் மீது வைத்துள்ள அக்கறை, உயிரினங்களின் மீது அவர் கொண்ட நேசம் உண்மையில் பாராட்டத்தக்கது.

வடசென்னையில் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த பாலாவும் அவனது அம்மாவும் பூனைக் குட்டிகளின் மீது அளவுகடந்த பிரியத்தை அன்பை வெளிக்காட்டுவது உண்மையில் வியப்பளிக்கிறது. இன்னமும் ஒரு சில மனிதர்கள் பிற உயிரினங்களின் மீது அளவுகடந்த அன்பை வைக்கத்தான் செய்கின்றனர். ஒரு கார்ட்டூன் படம் பார்ப்பது போல் இந்நாவல் தொடங்குகிறது. இந்த பூமியில் புதிதாகப் பிறந்திருக்கக் கூடிய ஒரு பூனைக் குட்டி தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளைச் சொல்லத் தொடங்குவதாக இக்கதை ஆரம்பமாகிறது. 

சாதாரண நடுத்தரவர்க்க குடும்பத்தைச் சார்ந்த அதிலும் சொந்த வீடு இல்லாத ஒருவர் பூனைக்குட்டிகளை அல்லது நாய்க் குட்டிகளை வளர்க்கும் பொழுது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பேச்சுக்களையும் வீட்டு உரிமையாளரிடம் அனுமதியும் கேட்டுக் கொண்டுதான் நாம் அதைச் செய்ய முடியும் என்ற நிலை இன்றும் பெரு நகரங்களில் பெரும்பாலான இடங்களில் நிலவி வருகிறது. அப்படியான நிலையில் கதை சூழல் தொடங்கி ஒரு மூன்று பூனைக்குட்டிகளும் ஒரு அம்மா பூனையுமாகக் கதை செல்கிறது. பின்னர் நாற்பது ஐம்பது நாய்கள் வரையில் தினமும் உணவளிக்கும் படி ஆகிப்போகிறது.இவைகளுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் தேடிச் சென்று அவர்களுக்கு உதவி செய்தும் வரும் பாலாவின் கதையாகச் சென்று முடிகிறது. ராணி என்கிற நாய் மூன்று குட்டிகளுடன் இந்த சமூகத்தில் வாழப் போராடும் கதை அவற்றிற்கு உதவி செய்யும் பால உண்மையில் ஹீரோ தான்.

பட்டாம் பூச்சியின் சுதந்திரம்

*பட்டாம்பூச்சி முழுவதும் வாசித்து முடித்தேன்... மிகச் சிறந்த நாவல் என்று சொல்லலாம். 855 பக்கங்கள். மயிர்க்கூச்செறிய வைக்கும் மாபெரும் மானி...