Monday, May 10, 2021

டெல்லி புறப்பாடு -4

டெல்லி புறப்பாடு 4 
டிசம்பர் மாதம் கடுமையான குளிர் நிலவும் டெல்லியில் இருப்பதைக் காட்டிலும் நம் ஊருக்குச் சென்று விடுவது என்று முடிவு ஆனபிறகு, வீட்டிற்கு வந்தேன் அப்பொழுது எதையாவது வாசிக்கலாம் அல்லது எழுதலாம் என்று தோன்றியது இப்படியெல்லாம் என்னுள் நிகழ்ந்த மாற்றத்திற்குக் காரணம் டெல்லி புறப்பட்டுக்கு பின்புதான்.

எழுதுவதற்கு நேரம் பார்த்து எதை எழுதப்போகிறோம் என்று முன் முடிவு எதுவும் இல்லாமல் பேனாவும் கையுமாக அலையும் பொழுது எதாவது ஒரு கதை மண்டையில் தோனாதா? என்றே அலைந்து கொண்டிருந்தான் அவதாரம் கடைசியில் சரி... 
ஏதாவது ஒரு கதையை இப்போது படிப்போம் பின் எழுதலாம் என்று நினைத்தேன். ஒரு பெரிய எழுத்தாளரின் நூலை எடுத்துப்படிக்க ஆரம்பித்தேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை அப்படியோ கதையோடு கதையாகக் கலந்து போனான். இருந்தும் கடைசிவரை படித்து முடிப்பது என்று முடிவு செய்துவிட்டு கிடுகிடுவென படிச்சுகிட்டே போனேன் கதை முடிய நூறு பக்கம் இருக்கும் அந்த கதை ஐந்நூறு பக்கம். அந்த நேரம் பார்த்து கரன்டு நின்னு போச்சு எப்படா கரன்டு வரும் என்று காத்திருந்து இருட்டில் என்ன செய்வது விளக்கு ஒளியில் புத்தகத்தைப் பார்த்து படிக்க நினைத்து விளக்கின் அருகில் கொண்டு சென்றதும் அம்மாவின் குரல் அடே அவதாரம் வந்து சாப்பிட்டுப் போடா... இன்னிக்கு கரன்டு வராதுனு நேத்தே சொன்னாங்க காலகாலத்துல எடுத்து வச்சி கிட்டு படு என்று அம்மா  சொல்ல இவனுக்கு அந்த நூலில் உள்ள கதை அப்படியே திரைப்படம் போலக் கண்ணில் ஓடிக்கொண்டிருப்பதாகவே உணர்ந்தான்...என்ன செய்ய சனிய புடுச்ச பழாபோன கரன்டு இப்பத்தான் நிகோனுமா என்று சொல்லிக்கொண்டே எழுந்தான். அன்று அவன் தான் படித்ததை அம்மாவிடம் சொல்லிக்கொண்டே சாப்பிட்டான்... அம்மா ஏதோ இவன படிக்க வச்சதால ஏதோ பேசிட்டு இருக்கானு அதற்கு எதுவும் பதில் சொல்லாமல் அவள் பாட்டுக்கு உணவு பரிமாறியபடியே இருந்தால் இவனுக்கு ஒரு சந்தோசம் நான் படித்த ஒரு கதை அதன் முடிவு என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே இருந்தான்...அப்போது திடீரென கரன்டு வந்தது மகிழ்ச்சியில் வேக வேக மாக சாப்பிட விட்டு எழுந்தான். அவனின் அம்மா எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதில் நினைத்துக் கொண்டால் இப்படி இவன் வயசில் பிள்ளைகள் வேலைக்கு பேயிட்டு கைநிறைய சம்பாதிக்குதுங்க... இவன் பைசாக்கு பிரயோஜனம் இல்லாத தமிழைப் படிகிறானேனு ஒரு கவலை. காரணம் அம்மாவிடம் பாங்கில் வேலைபாத்து மேனேஜரா இருந்து ரிட்டையர்டான அந்த வையசானவர் அடிக்கடி சொல்லுவாராம் தமிழ் படிச்சா என்னத்துக்கு ஒதவும்னு... அதை அம்மா அடிக்கடி ஒதவாத படிப்ப படிக்குறனேனு கவலையோடு என்ன ஆக போரனோ ஒரே கவலையா இருக்குனு சொல்லிகிட்டே இருக்கும்... அப்போது அவன் அம்மாவுக்கு இதை எப்படி சொல்லி புரியவைப்பேன் எதுவும் சொல்லத் தெரியமல் மௌனமாக இருந்தான். மீண்டும் கையில் அந்த பெரிய எழுத்தாளரின் புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு போனான்...

No comments:

Post a Comment

இராமாயணம் புதுப்பார்வை

இராமாயணம் படிப்பதும், ஆராய்வதும் அளவில்லாத ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் என்னுள் ஏற்படுத்துகிறது. என் தாத்தாவின் மூலம் இராமாயணத்தை முதலில் அ...